மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்படும் என பேசியதாகக் காங்கிரசின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் நரேந்திர தோமர் மறுப்பு

0 2904

மீண்டும் வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்படும் எனத் தான் ஒருபோதும் கூறவில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர தோமர் தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக அரசு ஓரடி பின்வாங்கியுள்ளதாகவும், மீண்டும் முன்னோக்கிச் செல்லும் என்றும் நரேந்திர தோமர் பேசியதாகச் செய்தி வெளியானது. இதையடுத்து வேளாண் சட்டங்கள் மீண்டும் கொண்டுவரப்படும் என அமைச்சர் பேசியதாகக் காங்கிரஸ் குற்றச்சாட்டியது.

இது குறித்துச் செய்தியாளர்கள் வினவியதற்குப் பதிலளித்த தோமர், தான் அவ்வாறு ஒருபோதும் கூறவில்லை எனத் தெரிவித்தார். உழவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து அரசு பாடுபடும் என்றே தான் கூறியதாகவும் நரேந்திர தோமர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments