ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி.. மீண்டும் ஆன்லைன் வகுப்பு?

0 5390

ஆன்லைன் வகுப்புகள் குறித்து முடிவு எடுக்குமாறு தொழிநுட்பக் கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அந்த அறிக்கையில், நாட்டில் தற்போது நிலவி வரும் ஒமைக்ரான் சூழலை கருத்தில் கொண்டு, மீண்டும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்துவது போன்ற திட்டங்கள் குறித்து தொழில்நுட்பக் கல்வி நிலையங்கள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. பின்னர் தொற்று குறைந்ததையடுத்து கடந்த ஓரிரு மாதங்களாக நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments