தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்ற மண்டபம் மீனவர்கள்

0 3073

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யபடுவார்கள் என மத்திய, மாநில அரசுகள் உறுதி அளித்ததை அடுத்து மண்டபம் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 12 மண்டபம்  மீன்வர்கள் உட்பட 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை விடுதலை செய்யக் கோரி கடந்த திங்கள் கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மத்திய மாநில அரசுகளின் உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதனையடுத்து இன்று காலை  அரசிடம் அனுமதி சீட்டு பெற்று சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments