ஒமைக்ரான் பரவல் காரணமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வார் ரூம் அமைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவு.!

0 2746

ஒமைக்ரான் பரவல் காரணமாக, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வார் ரூம் அமைக்க மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் கொரோனோ தடுப்பு பணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க, சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில், கொரோனோ வார் ரூம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இது அடுத்தடுத்த நாட்களில் முழுமையாக செயல்பட துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்த சில நாட்களில் மாவட்ட வாரியாக வார் ரூம் கட்டமைப்பை ஏற்படுத்திட, மக்கள் நல்வாழ்வுத்துறை அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வலியுறுத்தியுள்ளது. கொரோனா 2-வது அலை பரவலின்போது, பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் படுக்கைகள் மற்றும் கொரோனா சிகிச்சை முறைகள் வழங்குவதில், வார் ரூமின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகித்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments