கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து.!

0 2352

கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்த இனிய கொண்டாட்டத்தில், நீதி மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையிலான சமூகத்தை கட்டமைக்க உறுதியேற்போம் என்றும், இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நமது வாழ்வில் பின்பற்றுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், அமைதி, ஆரோக்கியம், வளம் பெருகட்டும் என்று தெரிவித்துள்ளார். சேவை, கருணை, மனிதாபிமானம் ஆகியவற்றை வலியுறுத்திய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையையும் போதனைகளையும் நினைவில் கொண்டு செயல்படுவோம், என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments