தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் ; சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2804
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும்

தமிழத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

26ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும், 27, 28ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இரு நாட்களுக்கு இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டமின்றி தெளிவாக காணப்படுவதோடு, புறநகர் பகுதிகளில் லேசான பனிமூட்டமும் நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments