ராமேஸ்வரத்தில் 5ஆவது நாளாக தொடரும் மீனவர்கள் போராட்டம்

0 2659

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி, ராமாநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து 5 ஆவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் என மொத்தம் 68 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

இந்நிலையில், கைதான மீனவர்களை விடுதலை செய்யக்கோரி கடந்த 20 ஆம் தேதி முதல் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 21 ஆம் தேதி முதல் புதுக்கோட்டை மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments