கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்த 3 பேர் கைது
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, கிராம நிர்வாக அலுவலரின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து வெள்ள நிவாரண பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தை பதிவு செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுப்பாக்கம் கிராமத்தில் வெள்ள நிவாரண பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், தனது கையெழுத்தை போலியாக பதிவு செய்து தன்னிடமே அளித்ததாக கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் விசாரணை மேற்கொண்டு, தண்டபாணி, ஐயனார் மஞ்சுளா ஆகியோரைக் கைது செய்த போலீசார், தலைமறைவான 2 பேரைத் தேடி வருகின்றனர்.
Comments