ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

0 2490

தமிழகம் முழுவதும் உள்ள ஸ்பாக்கள் மற்றும் மசாஜ் சென்டர்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த உத்தரவிட வேண்டும் என்று டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுர்வேத சிகிச்சை மையத்தின் சட்டரீதியான செயல்பாடுகளில் தலையிடக்கூடாது என விழுப்புரம் ஆரோவில் காவல் நிலையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்தார்.

காவல்துறையின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மட்டுமல்லாமல், குற்றங்கள் அதிகரிப்பதற்கு காரணமாகவும், ஊக்குவிப்பதாகவும் அமைந்துவிடும் என்று நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments