இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே திருப்பதிக்கு வருகை.. விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு

0 2678

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு, ஆந்திராவின் ரேணிகுண்டா விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

தனி விமானம் மூலம் குடும்பத்துடன் வந்த மகிந்த ராஜபக்சேவுக்கு ஆந்திர துணை முதலமைச்சர் நாராயணசுவாமி, ஆட்சியர், அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர். அத்தோடு, அங்கு பரதநாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருமலைக்கு சாலை மார்க்கமாக வந்த ராஜபக்சே திருமலையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கி, ஓய்வெடுத்து நாளை காலை குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இலங்கை பிரதமரின் வருகையை ஒட்டி, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments