தனியார் பள்ளியில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில், உயிரிழந்த 3 மாணவர்களின் வீடுகளுக்கு அமைச்சர் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல்

0 2045

திருநெல்வேலியில், கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட தனியார் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பலியான 3 மாணவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவர்களின் பெற்றோர், குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

கடந்த 17ஆம் தேதி திருநெல்வேலி டவுனில் உள்ள சாப்டர் பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், விபத்து நடந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விபத்து தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் உயிரிழந்த 3 மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாணவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்தார்.

வண்ணார்பேட்டை பகுதியில் சேதமடைந்த மாநகராட்சி நடுநிலை பள்ளி கட்டிடங்கள் இடிக்கப்பட்டு வரும் நிலையில், அதனை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments