பாபநாசம் அகஸ்தியர் அருவியில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

0 2384

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் நீராடி மகிழ்ந்தனர்.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அகஸ்தியர் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர்.

இந்நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து இன்று முதல்  காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை  சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்தது.

இதனையடுத்து காலை முதலே அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments