சென்னை ஐ.ஆர்.சி.டி.சி செயலியில் மொத்தமாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபர் கைது.!

0 2985

சென்னை தண்டையார்பேட்டையில் தனிநபர் ஐடி மூலம் IRCTC செயலியில் மொத்தமாக தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்த நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். 

தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 3வது தெருவில் நெட் செண்டர் நடத்தி வரும் சக்திவேல் என்பவர் தனிநபர் ஐடி மூலம் தட்கல் ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து, அவற்றை அதிக விலைக்கு விற்று வருவதாக ஐஆர்சிடிசி நிறுவனத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் புதுவண்ணாரப்பேட்டை  வ.உ.சி. நகர் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் அங்கு சோதனையிட்டதில்,  1 லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 132 தட்கல் டிக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதனையடுத்து 143 ரயில்வே சட்ட திட்ட பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்த ரயில்வே போலீசார், சக்திவேலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments