காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்..! உடனடியாக கடலில் நீந்துச் சென்று காப்பாற்றிய போலீசார்

0 3470

சென்னையில், காதல் தோல்வியால் கடலில் மூழ்கி தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை போலீசார் காப்பாற்றி கரை சேர்த்தனர்.

பெசண்ட் நகர் கடற்கரையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென கடலுக்குள் நீந்திச் சென்று தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த மீட்பு குழு போலீசார் 2 பேர் உடனடியாக கடலுக்குள் நீந்திச் சென்று அந்த இளைஞரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ரேலங்கி பணீந்திரகுமார் என்பதும், சென்னையில் பணியாற்றும் பெண்ணுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments