தமிழகத்தில் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் குளிர் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

0 4942

தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்குமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த இரு நாட்களுக்கு லேசான பனி மூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் குறைந்த பட்ச வெப்பநிலை இயல்பை விட ஒன்று முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் தெளிவாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் மழைக்கு வாய்ப்பிலை என்றும் கூறப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments