குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 வாகனங்களை திருடி சாராய வியாபாரியிடம் விற்பனை செய்த காவலர்

0 1557

நாகப்பட்டினத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 இருசக்கர வாகனங்களை திருடி, சாராய வியாபாரியிடன் விற்பனை செய்த காவலரை போலீசார் தேடி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த வாகனங்கள், காடம்பாடியில் உள்ள பழைய ஆயுதப்படை மைதான வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. இந்நிலையில், அந்த கணக்குகளை சரிபார்த்த போது இரண்டு பைக்குகள் காணாமல் போனது தெரியவந்தது.

இது தொடர்பாக வெளிப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அதே காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் முருகன் என்பவர் வாகனங்களை திருடி, சாராய வியாபாரி ராஜ்குமார் என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து ராஜ்குமாரை கைது செய்த போலீசார் தலைமறைவான காவலர் முருகனை தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments