மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்

0 3105
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் தொடங்கவுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால், விசாரணை நிறுத்தப்பட்டது.அந்த வழக்கில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு உதவும் வகையில் மருத்துவ குழுவை அமைக்க அறிவுறுத்திய உச்சநீதிமன்றம், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிரான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது.

இந்த நிலையில், ஆறுமுகசாமி ஆணையம் விரைவில் விசாரணையை துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது.பத்திரிக்கையாளர்கள், எய்ம்ஸ் மருத்துவ குழு உள்ளிட்டோரும் அமரும் வகையில் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு புதிதாக நீதிமன்ற வளாகம் அமைக்கும் பணி இறுதி நிலையை எட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments