கொரோனா பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை - எம்.எம்.நரவானே

0 2917

கொரோனா பாதிப்பு இன்னும் முடிவடையவில்லை என்றும் கொரோனா பின்னணியில் பேரிடர் மேலாண்மை பெரிய சவாலாக ஆகிவிட்டது என்றும் ராணுவ தலைமை தளபதி நரவனே கூறினார்.

புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2019ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து உலகம் முழுவதும் கொரோனாவால் பேரழிவை பார்த்துள்ளோம் என்றார். கொரோனாவை கையாள்வதில் உலக நாடுகளிடையே ஒற்றுமை காணப்படுவதாக கூறிய அவர்,  தடுப்பூசி உருவாக்குதல், தடுப்பூசி போடுதல் போன்ற பணிகள் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றார்.

கொரோனா ஓயும்வரை இயற்கை சீற்றங்கள் காத்திருக்காது என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது என்று கூறிய அவர், பேரிடர் மேலாண்மை பணிகளில் சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments