பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் தேர்வில் வினாக்களை வெள்ளைத்தாளில் எழுதி சமூக வலைத்தளங்களில் பரப்பிய பெண் கைது.!

0 2735

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வின் போது விதிமுறையை மீறி வினாக்களை வெள்ளைத்தாளில் எழுதி வந்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நாமக்கல்லை சேர்ந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 8-ம் தேதி தொடங்கி கணினி வாயிலாக நடத்தப்பட்ட இந்த தேர்வை எழுதிய 27 வயதுடைய பூர்ணிமா என்பவர் இந்த ஒழுங்கீன செயலில் ஈடுபட்டுள்ளார். 

இதனை அறிந்த ஆசிரியர் தேர்வு வாரியம் அந்த பெண் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்ததோடு அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்திருந்தது. அதன்படி பூர்ணிமா தேவி மீது வழக்கு பதிந்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வந்த நிலையில், அவரை கைது செய்துள்ளனர்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments