ஒமிக்ரான் தொற்றுப் பரவல் அச்சத்தால் இந்தியப் பங்குச்சந்தைகளில் சரிவு.!

0 2211

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.

ஒமிக்ரான் தொற்றுப் பரவல் அச்சத்தால் கடந்த இரு வாரங்களாக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வருவதால் பங்கு வணிகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வணிகநேரத் தொடக்கம் முதலே சரிவு தொடங்கியது. சென்செக்ஸ் ஆயிரத்து 76 புள்ளிகள் சரிந்து 55 ஆயிரத்து 935 ஆக இருந்தது.

தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 322 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 662 ஆக இருந்தது. எண்ணெய், உலோகம், நிதி, வாகனத் தயாரிப்பு ஆகிய தொழில் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 4 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments