பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த ராய் புயல் ; 100க்கும் மேற்பட்டோர் பலி

0 2632
பிலிப்பைன்ஸ் நாட்டை தாக்கிய சக்திவாய்ந்த ராய் புயல் ; 100க்கும் மேற்பட்டோர் பலி

பிலிப்பைன்ஸ் நாட்டை சக்திவாய்ந்த ராய் புயல் தாக்கிய நிலையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்திலும், கட்டிட இடிபாடுகளிலும் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று மணிக்கு 195 கிலோ மீட்டர் வேகத்தில் 3க்கும் மேற்பட்ட மாகாணங்களில் வீசிய புயலால் அப்பகுதியின் உள்கட்டமைப்புகள் பலத்த சேதத்தை சந்தித்துள்ளன.

இதன் காரணமாக சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

மழை குறைந்த நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments