வேலூர் ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை வழக்கு ; ஒருவன் கைது

0 8308
வேலூர் ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை வழக்கு ; ஒருவன் கைது

வேலூர் ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடந்த 14ஆம் தேதி தோட்டப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடைக்குள் புகுந்த கொள்ளையன் ஒருவன், 15.8 கிலோ நகைகளை அள்ளிச் சென்றான்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியில், சிங்க முகமூடி அணிந்த ஒருவனின் உருவம் பதிவாகியிருந்தது. அந்தக் காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த குறிஞ்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இராமன் என்பவனை கைது செய்துள்ளனர்.

கடையின் பின் பகுதியில் வெண்ட்டிலேட்டர் இருப்பது அவனுக்கு எப்படித் தெரிந்தது என்று விசாரித்து வரும் போலீசார், இராமனை கடைக்கு அழைத்துச் சென்று கொள்ளையடித்த விதம் குறித்து செயல்முறை விளக்கம் பெற்று வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments