சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.1.5 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்... தமிழகத்தை சேர்ந்த 15 பேர் உள்பட 18 பேர் கைது

0 2880

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தமிழகத்தை சேர்ந்த 15 பேர் உட்பட 18 பேரை கைது செய்தனர். 

ஊத்துக்கோட்டை - புத்தூர் நெடுஞ்சாலையில், பால மங்கலம் கிராமம் சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 20 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து வேனில் இருந்த 4 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், சதாசிவ கோனா செல்லும் வழியில் உள்ள பாண்டுலய்யா கோனா மலையில் செம்மரங்களை வெட்டும் கூலித்தொழிலாளர்கள் 14 பேர் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், திருவண்ணாமலையை சேர்ந்த 14 கூலி தொழிலாளர்களை கைது செய்ததோடு,  270 செம்மரக்கட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments