கொல்கத்தா மாநகராட்சியில் 144 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க இன்று வாக்குப்பதிவு

0 2678

கொல்கத்தா மாநகராட்சியில் மொத்தமுள்ள 144 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

நாலாயிரத்து 959 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 23 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மூன்றாவது முறை ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளது. பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் போட்டியில் உள்ளனர்.

பதிவாகும் வாக்குகள் செவ்வாயன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது கொல்கத்தா மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றிபெற்றது குறிப்பிடத் தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments