இந்தியாவில் இதுவரை 137 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

0 1684

நாட்டில் இதுவரை மொத்தம் 137 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சனிக்கிழமை  மாலை 7 மணி நிலவரப்படி 69 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இரவு வரை செலுத்தப்படவுள்ள தடுப்பூசிகளின் இறுதி அறிக்கைகளைக் கணக்கிடும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரை மொத்தம் 137 கோடியே 37 லட்சத்து 66 ஆயிரத்து 189 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments