சென்னையில் முறையாக அமைக்காத சாலைகளை ஒப்பந்ததாரர்களே சீரமைக்க உத்தரவிட வேண்டும் என மாநகராட்சிக்கு, மாநில தகவல் ஆணையம் பரிந்துரை.!

0 3071

சென்னையில் முறையாக அமைக்காத சாலைகளை ஒப்பந்ததாரர்களே சீரமைக்க உத்தரவிட வேண்டும் என மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பசுமைவழிச்சாலை, கேசவபெருமாள் பிரதான சாலை தொடர்பாக தகவல் அளிக்க மறுத்தததாக மாநில தகவல் ஆணையத்தில் அடையாறை சேர்ந்த முருகேஷ் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரை விசாரித்த மாநில தகவல் ஆணையர் முத்துராஜ்,  மனுதாரர் முருகேசுக்கு குறிப்பிட்ட காலத்தில் தகவல் அளிக்காததால்  27 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர, அடையாறு மண்டல தகவல் அதிகாரிக்கு உத்தவிட்டுள்ளார்.

சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் சாலைகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்களை ஓய்வுபெற்ற ராணுவ பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மாநில தகவல் ஆணையர் பரிந்துரைத்துள்ளார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments