கர்நாடகாவில் சத்ரபதி சிவாஜியின் சிலை மீது மை பூசப்பட்டதை கண்டித்து அம்மாநிலத்தில் மராத்தி பேசுபவர்கள் போராட்டம்.!

0 2918

கர்நாடகாவில் சத்ரபதி சிவாஜியின் சிலை மீது மை பூசப்பட்டதை கண்டித்து அம்மாநிலத்தின் பெலகாவியில் மராத்தி பேசுபவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால், மகாராஷ்டிரா எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

நேற்று பெங்களூருவில் உள்ள சத்ரபதி சிவாஜியின் சிலை மீது சிலர் மை பூசுவது போன்ற வீடியோ வெளியான நிலையில், பெலகாவியில் காவல்துறையினரின் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இதன், எதிரொலியாக பெலகாவி நகரில் இருக்கும் சங்கொலி ராயண்ணா சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால் கன்னட அமைப்புகளுக்கும், மராட்டியர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால், பெலகாவியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments