5 ஆம் வகுப்பு மாணவியின் எரிந்துபோன சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்.. 3ஆவது நாளாக போலீசார் தீவிர விசாரணை..!

0 3624
5 ஆம் வகுப்பு மாணவியின் எரிந்துபோன சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்..

கொடைக்கானலில் பள்ளி வளாகத்தில் 10 வயது சிறுமியின் எரிந்த நிலையிலான சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், 3ஆவது நாளாக இன்றும் விசாரணை தொடர்கிறது.

பாச்சலூரில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் அங்கு 5ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுமியின் எரிந்த சடலம் மீட்கப்பட்டது. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த தாண்டிகுடி போலீசார், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரிடம் 2 நாட்களாக தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், 3 வது நாளாக இன்று சிறுமியின் பெற்றோரை பாச்சலூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படவுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments