புயலே வந்தாலும் தன் கடமையை சிறப்பாக செய்யும் தபால்காரர் : சூப்பர் ஹீரோவாக பார்க்கும் மக்கள்

0 16042

மெரிக்காவில் புயலால் பாதிக்கப்பட்ட கென்டகி மாகாணத்தில், மீட்புப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், தபால்காரர் ஒருவர் தொடர்ந்து பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

கோடி ஸ்மித்  என்னும் அந்த தபால்காரர், மேஃபீல்டு பகுதியில் மின்கம்பிகள் அறுந்து விழுந்து கிடக்கும் நிலையில், ஒவ்வொரு வீடாக சென்று வழக்கம்போல் தபால்களை விநியோகித்து வருகிறார்.

இந்த நகரை இவ்வாறு சேதமடைந்த நிலையில் பார்ப்பது மிகவும் வருத்தமளிப்பதாக கோடி ஸ்மித் கூறுகிறார். தற்போதைய சூழலில் இவர் மிகச்சிறந்த பணியை மேற்கொண்டிருப்பதாகவும், மேஃபீல்டு பகுதியின் ஹீரோ என்றும் இவரை அப்பகுதி மக்கள் போற்றுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments