தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 32000 கேள்விகள் நிலுவையில் உள்ளன - மத்திய அரசு

0 2360

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட 32 ஆயிரம் கேள்விகள் இன்னமும் மத்திய தகவல் ஆணையத்தின் முன் நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்ப ப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளிக்கப்பட்ட பதிலில், 2019-20 ஆம் ஆண்டில் 35 ஆயிரம் கேள்விகளும், 2020-21ஆம் ஆண்டில் 38 ஆயிரம் கேள்விகளும் பதிலளிக்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒட்டுமொத்தமாக, 2021-22ஆம் ஆண்டில் டிசம்பர் 6ஆம் தேதி நிலவரப்படி, 32 ஆயிரத்து 147 கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமல், மத்திய தகவல் ஆணையம் நிலுவையில் வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments