ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து விட்ட பெண் குழந்தை… நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு உயிருடன் மீட்பு

0 3155

மத்தியப் பிரதேச மாநிலம் சாஹத்தர்புர் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றுக்குள விழுந்த ஒரு வயதேயான பெண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டாள்.

 தண்ணீருக்காக தோண்டப்பட்ட அந்த ஆழ்துளைக் கிணறு அலட்சியமாக மூடப்படாமல் திறந்தே இருந்த நிலையில் அதன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அதில் சுமார் 15 அடி ஆழத்தில் விழுந்து மண்ணில் சிக்கியது.

ராணுவம்,காவல்துறை மாவட்ட அதிகாரிகள் உள்பட பலரும் குழந்தையை மீட்க முயற்சி மேற்கொண்டனர். குழந்தை சுவாசிப்பதற்காக ஆழ்துளைக்குள் பிராண வாயு செலுத்தப்பட்டது.நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments