கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

0 6577
பாகிஸ்தான் - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா பரவல் காரணமாக பாகிஸ்தான் - மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியியில் ஏற்கனவே 3 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், வீரர்கள், உதவி பயிற்சியாளர்கள் என மேலும் 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜூன் மாதத்திற்கு முன்னதாக நடத்தப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments