சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி

0 3006
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி

புதுக்கோட்டை அருகே, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மணிகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கீரனூர் அருகே பள்ளத்துபட்டி பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதன் கடந்த நவம்பர் 12ஆம் தேதி, வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், முக்கிய குற்றவாளியான மணிகண்டன் ஜாமீன் கோரியிருந்த வழக்கில், இருத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.

இதனிடையே, புதுக்கோட்டை சிறையில் இருந்து வந்த மணிகண்டன் உள்ளிட்ட இருவர் கீரனூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் வரும் 30ஆம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments