தடை செய்யப்பட்ட சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை ; மத்திய அரசு

0 2614
தடை செய்யப்பட்ட சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை

டிக்டாக், பப்ஜி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி எம்பி மலூக் நாகர் நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தடை செய்யப்பட்ட சீன செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து எந்த திட்டமும் இப்போதைக்கு அரசிடம் இல்லை என்றார்.

மேலும் இணைய குற்றங்களை பாதுகாப்பான பிரவுஸர்கள் மூலம் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments