கடன் பிரச்சனையால் மகனை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை

0 2412
கடன் பிரச்சனையால் மகனை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு தம்பதி தற்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் கடன் பிரச்சனை எனக் கூறி விஷம் கொடுத்து மகனை கொலை செய்துவிட்டு, தம்பதி தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெய்லராக பணியாற்றி வந்த சிவாஜியும் அவரது மனைவி வனிதாவும் கடன் பிரச்சனையால் 10 வயதேயான தங்களது மகனை விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இன்று காலை மூவரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனிதாவின் தாய், போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்களது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் வனிதா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.

அதில், கடன் பிரச்சனையால் தாங்கள் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. சிவாஜி கந்துவட்டிக்கு கடன் வாங்கியிருந்தாரா? கடன் கேட்டு யாரேனும் மிரட்டியதால் தற்கொலை செய்துக் கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments