மண்ணுளி பாம்பை கடத்தி ரூ.4 லட்சத்துக்கு விற்க முயன்ற 13 பேர் கொண்ட கும்பல் கைது..!

0 2880

ஆந்திராவில் (red sand boa) ரெட் சாண்ட் பொவா என்றழைக்கப்படும் மண்ணுளி பாம்பை கடத்தி விற்க முயன்ற 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

மண்ணுளி பாம்பு ஒன்று கடத்திச்செல்லப்படுவதாக சித்தூர் மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாநில எல்லைகளில் போலீசார் துணையுடன் வனத்துறையினர் கண்காணிப்பை மேற்கொண்டனர்.

அப்போது பாண்டுரங்காபுரம் ரயில்வே கேட் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 13 பேரை பிடித்து, ஒரு மண்ணுளி பாம்பு, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு கார், 2 இரு சக்கர் வாகனங்கள், 13 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கடத்திய பாம்பை 4 லட்சம் ரூபாய்க்கு விற்க திட்டமிடப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments