பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை 6 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி சென்ற உறவினர்கள்

0 3653

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் பிரசவ வலியால் துடித்த பெண்ணை 6 கிலோ மீட்டர் தூரம் டோலி கட்டி உறவினர்கள் தூக்கி வந்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

அணைக்கட்டு தாலுகாவில் உள்ள மலைக்கிராமத்தில் வசிக்கும் அனிதா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு நேற்று பிற்பகல் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு ஒழுங்கான பாதை இல்லாததால் உறவினர்கள் டோலி மற்றும் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் இங்கு சாலை வசதி ஏற்படுத்தி தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments