பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டைகள் வழங்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.!

0 2741

பாலியல் தொழிலாளர்களுக்கு ரேஷன், ஆதார், வாக்காளர் அட்டைகள் வழங்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தொழில் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குடிமக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவது அரசின் கடமையாகும் என்றும் தெரிவித்தனர்.

பாலியல் தொழிலாளர்களின் பட்டியலைத் தயாரிக்க தேசிய மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகளின் உதவியை அதிகாரிகள் நாடலாம் என்று தெரிவித்தனர்.  அடையாள அட்டைகளைத் தயாரிக்கும்போது பாலியல் தொழிலாளர்களின் பெயர்கள், அடையாளம் தொடர்பாக ரகசியம் காக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments