வெடிபொருட்களுடன் பிடிபட்ட விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு.!
வெடிபொருட்களுடன் பிடிபட்ட விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை பூந்தமல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு பல்லாவரம் - பம்மல் சாலை சந்திப்பு பகுதியில் உதயாஸ் என்பவர் வெடிகுண்டுகளுடன் பிடிபட்டது மட்டுமின்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் 6 பேர் கைதாகினர்.
மேலும் இவர்களிடம் வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பது போன்ற வீடியோ காட்சிகள் சிக்கியதை அடுத்து 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது .நேற்று இந்த வழக்கில் 4பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
Comments