வெடிபொருட்களுடன் பிடிபட்ட விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை விடுதலை செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு.!

0 3063

வெடிபொருட்களுடன் பிடிபட்ட விடுதலை புலிகள் அமைப்பைச் சேர்ந்த 4 பேரை பூந்தமல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு பல்லாவரம் - பம்மல் சாலை சந்திப்பு பகுதியில் உதயாஸ் என்பவர் வெடிகுண்டுகளுடன் பிடிபட்டது மட்டுமின்றி அவர் கொடுத்த தகவலின் பேரில் 6 பேர் கைதாகினர்.

மேலும் இவர்களிடம் வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பது போன்ற வீடியோ காட்சிகள் சிக்கியதை அடுத்து  6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை பூந்தமல்லி வெடிகுண்டு வழக்கு விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்தது .நேற்று இந்த வழக்கில் 4பேரை விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments