காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கிராம நிர்வாக அலுவலர் கைது

0 11402
காதல் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கிராம நிர்வாக அலுவலர் கைது

கள்ளக்குறிச்சியில் பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்த கிராம நிர்வாக அலுவலர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் நன்னவரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்து வருகிறார். அவர் 3 ஆண்டுகளாக ஈஸ்வரி என்பவரை காதலித்து 3 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துள்ளார்.

இந்த திருமணத்தில் ராம்குமாரின் பெற்றோருக்கு உடன்பாடில்லை எனக் கூறப்படும் நிலையில், அவர்களது மனம் மாறும் வரை ஈஸ்வரியை வாடகை வீட்டில் தங்க வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் ராம்குமார் தன்னை தனியாக விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டதாகவும், அதிக அளவில் வரதட்சணை கொடுத்தால் மட்டுமே தன்னை ஏற்றுக்கொள்வதாக கூறி கொடுமைப்படுத்துவதாகவும் ஈஸ்வரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments