முதுகுளத்தூர் இளைஞர் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என்பது உடற்கூறாய்வில் உறுதி ; ஏடிஜிபி தாமரைக்கண்ணன்

0 3196
முதுகுளத்தூர் இளைஞர் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என்பது உடற்கூறாய்வில் உறுதி

முதுகுளத்தூர் இளைஞர் மணிகண்டன் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளார் என்பது உடற்கூறாய்வில் தெரியவந்துள்து என்றும் ஆதாரமற்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு விடுவிக்கப்பட்ட மணிகண்டன் என்ற இளைஞர், வீட்டுக்கு வந்த சில மணி நேரத்தில் வாயில் நுரைதள்ளிய நிலையில் உயிரிழந்தார் என்று கூறப்படுகிறது.

போலீசாரின் தாக்குதலால் தான் அவர் உயிரிழந்தார் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த, ஏடிஜிபி தாமரைக்கண்ணன், மணிகண்டனுடன் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் குறித்து விசாரணை நடத்திவருகிறோம் என்றார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments