முதலமைச்சர் குறித்த சாட்டை துரைமுருகனின் அவதூறு பேச்சு ; எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யாத காவல்துறையினருக்கு நீதிபதி புகழேந்தி கண்டனம்

0 3168
எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யாத காவல்துறையினருக்கு நீதிபதி புகழேந்தி கண்டனம்

யூ டியூபில் முதலமைச்சர் தொடர்பாக சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியதை, எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யாத காவல்துறையினருக்கு, உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

முதலமைச்சருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன? அவர்களின் வழக்குகள் எவ்வாறு கையாளப்படும்? என்றும் நீதிபதி வினவியுள்ளார். மேலும், போதிய ஆதாரம் இல்லாததால் அரசின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

அப்போது, அரசுத் தரப்பில் ஒரு வாரம் கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments