காஷ்மீரில் போலீசார் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிர் தியாகம்.!

0 1713

காஷ்மீரில் போலீசார் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிர் தியாகம் செய்தனர்.

ஸ்ரீநகர் அருகேயுள் ஜெவான் என்னுமிடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரின் பேருந்து மீது, திடீரென தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் எஸ்.ஐ உட்பட இரு போலீசார் உயிர் தியாகம் செய்தனர்.

மேலும் 12 பேர் காயமடைந்தனர். இதில், மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு, தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இத்தாக்குதலுக்கு சில மணி நேரம் முன்னதாக ரங்ரெத் பகுதியில் அந்த இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments