தெலங்கானாவில் பெண்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் பறித்த மந்திரவாதி கைது.!

0 2701

தெலங்கானா மாநிலம் அனந்தபூரில், பெண்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கில் பணம் பறித்த மந்திரவாதியை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரங்கா ரெட்டி மாவட்டம் காமதானம் பகுதியில், வீட்டில் காளி தேவி சிலையை வைத்து வழிபாடு நடத்தி, மந்திர தந்திர பூஜைகளில் சிவசாமி என்பவன் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து, சிவசாமியிடம் பூஜைகள் நடத்துமாறு கேட்டு கொண்டார்.

இன்னும் அதிக பணம் தேவை என கேட்டு கொண்டே இருந்ததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments