நடிகை கங்கனா ரனாவத்தை அடுத்த மாதம் 25ந்தேதி வரை கைது செய்ய மாட்டோம் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்த காவல்துறையினர்.! 

0 4003

நடிகை கங்கனா ரனாவத்தை அடுத்த மாதம் 25ந்தேதி வரை கைது செய்ய மாட்டோம் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

நடிகை கங்கனா ரனாவத் கடந்த மாதம் சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது தொடர்பாக அவர் மீது சீக்கிய அமைப்பினர் மும்பை காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகார் குறித்து மும்பை போலீசார் நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி கங்கனா ரனாவத் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையின் போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனு மீதான அடுத்த கட்ட விசாரணை வரும் வரை கங்கனா ரனாவத்தை கைது செய்ய மாட்டோம் எனக் கூறினார்.இதையடுத்து நீதிபதிகள் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 25-ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments