விழுப்புரம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது.!
விழுப்புரம் மாவட்டத்தில் காவல் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது செய்யப்பட்டான்.
வளவனூர் காவல் நிலையத்தில் வெடி குண்டு வைத்திருப்பதாக, மர்ம நபர் ஒருவர் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து, வளவனூர் காவல் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் அது புரளி எனத் தெரிய வந்தது. இதனை அடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பேசியவனின் செல்போன் எண் மூலம் புலன் விசாரணை மேற்கொண்ட போலீசார் மாதவராஜ் என்பவனை கைது செய்தனர்.
Comments