டேங்கர் லாரியில் 7,000 லிட்டர் கலப்பட டீசல் கடத்தல்: லாரி உரிமையாளர், ஓட்டுனரை கைது செய்த போலீசார்

0 4105

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே வாகன தணிக்கையின் போது விற்பனைக்காக 7ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை டேங்கர் லாரியில் கடத்திச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாராயணபாளையம் பகுதியில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவ்வழியே வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான கலப்பட டீசலை விற்பனைக்காக திருச்செங்கோட்டிற்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து லாரி ஓட்டுனர் முருகேசன், உடனிருந்த உரிமையாளர் மோகன் கைது செய்யப்பட்டு, டேங்கர் லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments