தஞ்சையில் கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டத்தில் இருவேறு கட்சியினர் இடையே கைகலப்பு

0 2345
தஞ்சையில் கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டத்தில் இருவேறு கட்சியினர் இடையே கைகலப்பு

தஞ்சையில் கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டத்தில் இருவேறு கட்சியினர் இடையே வாக்குவாதம், கைகலப்பு உருவானது. நிக்கல்சன் கூட்டுறவு நகர வங்கி பேரவைக் கூட்டம் அங்குள்ள அரங்கம் ஒன்றில் நடைபெற்றது.

கூட்டம் தொடங்கியவுடன் மேலாண்மை இயக்குனர் அன்புச்செல்வி திட்டப் பணிகள் குறித்து பேசத் தொடங்கினார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த ஒருதரப்பினர், ஆண்டு அறிக்கை புத்தகத்தில் தங்கள் பிரமுகர்களின் படங்கள் இடம்பெறவில்லை எனக் கூறி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சிலர் மேடையில் போட்டிருந்த மேசையைப் பிடித்து இழுத்து ரகளையில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் கூச்சல், குழப்பம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments