துணிக்கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த நடிகை சமந்தா ; ரசிகர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார்

0 4609
துணிக்கடை திறப்பு விழாவுக்கு வருகை தந்த நடிகை சமந்தா

ஆந்திர மாநிலம் கடப்பாவில் துணிக்கடை திறப்பு விழாவுக்கு வந்திருந்த நடிகை சமந்தாவை பார்க்க ஏராளமானோர் திரண்டனர். திறப்பு விழாவுக்கு சமந்தா வருவதை துணிக்கடை நிறுவனம் விளம்பரம் செய்திருந்ததால், காலை முதலே கடைக்கு வெளியே ரசிகர்கள் குவியத் தொடங்கியதால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

காரில் இருந்து சமந்தா இறங்கிய போது அவரது ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர். பின்னர், கடைக்குள் சென்று விளக்கை ஏற்றி வைத்த சமந்தா, கடையை பார்வையிட்ட போது பலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments